Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Bib. Info | 184p. |
Categories | கல்வி அரசியல் |
Shipping Charges(USD) |
இன்றைய கல்விமுறை என்பது எடுத்துச் சொல்வது என்ற நோயால் அவதியுறுகிறது என்று பாவ்லோ ப்ரையிலே இந்த புத்தகத்தில் அறிவிக்கிறார். எடுத்துச்-சொல்வது என்பதே வகுப்பறை கல்வியின் ஒரே அம்சம். அந்த உறவு அடிப்படையில் எடுத்துச் சொல்வது ஒரு மனிதரையும் (ஆசிரியர்), பொறுமையோடு கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு பருப்பொருளையும் இன்றைய கல்வி உள்ளடக்கமாக கொண்டுள்ளது. ஆசிரியர் என்பவர் சகல அதிகாரமும் படைத்தவர். யதார்த்தத்தை அசையாத தன்மை கொண்ட இருக்கமடைந்த மாற்ற முடியாத ஜடப்பொருளாக (பாடமாக) தனித்னிப் பெட்டிகளாய் உடைத்து இலக்காக பாவித்து முன்வைப்பதைக் காண்கிறோம். வங்கி சேமிப்பு போல நடக்கும் கல்விமுறையில் அறிவு என்பது தாங்கள் தகவல்களாக அதிகம் சேமித்து வைத்திருப்பதாய் கருதும் சிலரால், ஒன்றுமே தெரியாது என்று கருதப்படும் பலருக்கு பரிசாக வழங்கப்படும் ஒன்றாய் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் ப்ரையிரே.